https://s3.amazonaws.com/adaderanatamil/1590768118-corona-2.jpg

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 8 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.