https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/AP28-05-2020_000086B.jpg

தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா; பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது!

by

தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் அடங்கிய தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது . 

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 733. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 141. சென்னையில் மட்டும் இன்று உறுதி செய்யப்பட்டோர் 618. 

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று மட்டும் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,313 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் மொத்தம் 8,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 11,334 மாதிரிகள் உள்பட இதுவரை 4,66,550 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 4,45,194 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.