தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கதொடர்வண்டித் துறை வாரியம் ஒப்புதல் – மின்முரசு

ஜூன் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கூடுதலாக ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதற்கான டிக்கெட்டுகளை ரெயில் நிலையத்தின் மையங்களில் முன்பதிவு செய்யலாம் என அண்மையில் அறிவித்தது. முன்னதாக ரெயில்வே துறை அறிவித்த 200 ரெயில்களில் தமிழகத்துக்கு எந்த ரெயிலும் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே கடந்த 23-ம் தேதி தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையில் ‘‘கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு’’ குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூன் 1-ம்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி ஆகிய வழித்தடங்கள் வழியே இந்த ரெயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

அரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டதுபிகினியில் அசத்தல் பாவனை கொடுத்த சாயிஷா…. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/112566542_p08fmwr8-780x500.jpg

மகாதீர் முகமது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவாரா? – மலேசிய அரசியல் களம்

Nila Raghuraman May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005302040096944_1_wberjenv._L_styvpf.jpg

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை

Ilayaraja May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301921491054_Tamil_News_Lockdown-Extended-Till-June-30-Malls-Restaurants-Can-Reopen_SECVPF.gif

நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு

murugan May 30, 2020 0 comment