ரணில் மற்றும் சஜித் பிரேமதாசவிற்கிடையில் விசேட கலந்துரையாடல்

by

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவும் இன்று தனித்தனியாக கூடி கலந்துரையாடலை நடத்தின.

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று காலை ஸ்ரீகோத்தாவில் கூடியது.

இதன்போது ஐக்கிய தேசியக்கட்சியின் 102 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுத்தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்படுகிறது.

இந்த 102 பேரினதும் கட்சி உறுப்புரிமைகள் ரத்துச்செய்யப்படும் அறிவிப்பை ஐக்கிய தேசியக்கட்சி விடுத்துள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெறுகிறது.

அதேநேரம் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு இன்று பிற்பகல் எத்துல்கோட்டேயில்உள்ள தலைமையகத்தில் கூடுகிறது.