http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__115825831890107.jpg

ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலர்.:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக நியமனம்

கோபி: 10 வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் மாணவர்களின் நலன் கருதி மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்தார். தேர்வு மையங்களில் மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கும் அனைத்து பாதுகாப்பது ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு முழு பாதுகாப்பது அளிக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார். கொரோனா பரவி வரும் சூழலில் மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க ஆன்-லைன்யிலும் படம் நடத்துவது அவசியம் என செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிகள் திறப்பது பற்றி அரசு இதுவரை இந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.