http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__486843287944794.jpg

காவல் நிலையங்களில் வழுக்கி விழுந்து காயமுற்றவர்கள் பற்றி விளக்கம் தர சென்னை மாநகர போலீசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் காவல் நிலையங்களில் வழுக்கி விழுந்து காயமுற்றவர்கள் பற்றி விளக்கம் தர சென்னை மாநகர போலீசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னையில் காவல் நிலையங்களில் உள்ள குளியலறையில் பலர் வழுக்கி விழுந்துள்ளனர். குளியலறையில் வழுக்கி விழும் சம்பவங்களை தடுக்க போல்ஸ் என நடவடிக்கை எடுத்துள்ளது? காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவா என்று ஆணையம் கேள்வியெழுப்பியுள்ளது.