https://s3.amazonaws.com/adaderanatamil/1590744616-dischared-2.jpg

கொவிட்-19 தொற்று - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 754 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1530 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 766 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.