https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547909.jpg

தமிழகத்தில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு; இதுவரை 154 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 29) புதிய உச்சமாக ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆகவும், பலி எண்ணிக்கை 154 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 733 பேர் தமிழகத்திலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 141 பேரும் அடங்கும். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 7 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 154 ஆக உள்ளது. இன்று 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 11,313 ஆக உயர்ந்துள்ளது.

https://img.dinamalar.com/data/gallery/gallerye_185627566_2547909.jpg

தற்போது 8,776 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 71 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,334 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 518 பேர், பெண்கள் 356 பேர். மொத்த பாதிப்பில் 12 வயதுக்குள் உள்ளவர்கள் 1,203 பேர், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 17,237 பேர், 60 வயதை கடந்தவர்கள் 1,806 பேர் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE