ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

by

புதிதாக நியமனம் பெற்ற இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே இன்று இலங்கையின் ஜனாதிபதியை சந்தித்தார்.

மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

ஏற்கனவே கோபால் பக்லே, கொரோனவைரஸ் பரவல் காரணமாக தமது நியமன ஆவணங்களை காணொளி மாநாட்டின் ஊடாக இலங்கையின் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.

எனவே அதன் பின்னரான மரியாதை நிமித்தமான முதல் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொரோனவைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியமைக்காக இலங்கையின் ஜனாதிபதிக்கு இந்திய பிரதமரின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கொரோனவைரஸ் கட்டுப்படுத்தலுக்கு பின்னர் இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து இன்றைய சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனவுக்கு பின்னரான பொருளாதார கட்டியெழுப்பலுக்கு இந்தியா உதவும் என்ற உறுதிமொழியையும் இதன்போது உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவும் பிரசன்னமாகியிருந்தார்