https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/murukana.jpg

திருவாரூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் பலி

by

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் மறைக்க கோரையாறு பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் வியாழக்கிழமை இரவு பலியானார்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி குரும்பல் ரயிலடி தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் மகன் முருகானந்தம்(47). இவர் ஜாம்பாவனோடையில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி செல்லும் பொழுது இரவு எடையூர் காவல் சரக எல்லையான மரைக்கா கோரையாறு பாலத்தின் அருகே திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த எடையூர் காவல் ஆய்வாளர் சிவதாஸ் சடலத்தைக் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.