http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__131542384624482.jpg

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  8,158-ஆக அதிகரித்துள்ளது.