http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__557796657085419.jpg

பத்திரப்பதிவின் போது வழங்கவேண்டிய வாழ்வுச் சான்றிதழை இனி மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்: பத்திரப்பதிவுத்துறை

சென்னை: பத்திரப்பதிவின் போது வழங்கவேண்டிய வாழ்வுச் சான்றிதழை இனி மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது. வாழ்வுச் சான்றிதழை ஜூலை 31-ம் தேதி வரை மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பலாம். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வுச் சான்றிதழை நேரில் வந்து வழங்குவதால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.