https://s3.amazonaws.com/adaderanatamil/1590728576-high-court-2.jpg

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான 9 ஆவது நாள் விசாரணை ஆரம்பம்

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ஒன்பதாவது நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (28) மனுக்கள் மீதான விசாரணை எட்டாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இன்று காலை 10 மணி வரை குறித்த விசாரணைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.