https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/ka_sengottaiyan.jpg

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

by

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடா்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வுகள் வரும் ஜூன் 15 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நடத்துவது தொடா்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘வெளியூா்களில் இருந்து வரக்கூடிய மாணவா்களை வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை. வெளியூரில் இருந்து வரும் மாணவா்கள் நேரடியாகத் தோ்வு எழுதலாம். வெளியூரில் இருந்து தோ்வு எழுத வரும் மாணவா்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும். மாணவா் விடுதிகளை ஜூன் 11-ஆம் தேதி முதல் தோ்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும். தோ்வு எழுத வரும் மாணவா்கள், தோ்வுப்பணிகளில் உள்ள ஆசிரியா்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.