பொறியில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட கரும்புலி உயிரிழந்துள்ளது

by

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் லக்சபான வாழமலை தோட்டத்தில் பொறி ஒன்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட கரும்புலி இன்று காலை உடவலவ கால் நடை மருத்துவமனை காப்பகத்தில் உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காய்கறி தோட்டத்தில் பயிர் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் இந்த கரும்புலி அண்மையில் சிக்கிக்கொண்டது.

உடவலவ கால்நடை மருத்துவர்கள் மற்றும் ரத்தெனிகல கால்நடை மருத்துவமனையின் மருத்துவர்கள் இணைந்து மயக்க மருந்து செலுத்தி பொறியில் சிக்கியிருந்த கரும்புலியை மீட்டு, சிகிச்சை அளிப்பதற்காக உடவவலவ கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புலி இன்று உயிரிழந்துள்ளது.

சிவனொளிபாத மலை காட்டுப் பகுதியில் இப்படியான 6 கரும்புலிகள் வசித்து வருவதாகவும் பெந்தரா பாதுஸ் என்ற விலங்கு இனத்தை சார்ந்த இந்த கரும்புலிகள் ஒரு வீதம் அங்கு வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.