https://d13m78zjix4z2t.cloudfront.net/vija_15.png

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு : தமிழகத்தில் நிபுணர்கள் குழுவை அமைக்க விஜயகாந்த் கோரிக்கை!

by

தமிழகத்தில், வெட்டுக்கிளிகள் நுழைவதை தடுக்க, துறைசார்ந்த நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆபத்தான பூச்சியினமான பாலைவன வெட்டுக்கிளிகள், பல நாடுகளில் பயிர்களை பதம்பார்த்துவிட்டு, தற்போது, இந்தியாவை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கும் இந்த பூச்சிகள், உணவு பாதுகாப்பின் மீது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

உலக நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள் தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்ற வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எனவே, வெட்டுக்கிளிகளை தமிழகத்திற்குள் நுழையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.