பாட்னாவில் சோகம் – கட்டுமான பணியின்போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலி – மின்முரசு

பீகார் தலைநகர் பாட்னாவில் கட்டுமான பணியின் போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா:

பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் ஜவகர்லால் நேரு மார்க் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நேற்று காலை கட்டுமான பணியின்போது சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. சிலாப்பின் கீழே 3 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். 

இதையடுத்து, உடனடியாக அந்த குழந்தைகளை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகளும் பரிதாபமாக பலியாகினர் என டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக, பாட்னா கலெக்டர் ரவிகுமார் கூறுகையில், சிலாப் விழுந்து படுகாயம் அடைந்த 3 குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். விபத்தில் பலியான 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

கட்டுமான பணியின் போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282308449432_Tamil_News_CSK-MS-Dhoni-hold-team-meeting-before-just-two-minutes_SECVPF.gif

எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்

Ilayaraja May 29, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282224068951_Tamil_News_Amit-Shah-Speaks-To-Chief-Minister-Asks-For-Feedback-On_SECVPF.gif

மாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282155430963_1_Nazriya005._L_styvpf.jpg

நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு குவியம் லைக்ஸ்

murugan May 28, 2020 0 comment