https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547661.jpg

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: துல்லியமாக அளவீடு செய்யும் சீன குழு

பீஜிங்: எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறு மதிப்பீடு செய்வதற்காக, சீன, 'சர்வே' குழுவினர், நேற்று அங்கு சென்றடைந்தனர்.

அண்டை நாடான சீனா, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை, இதுவரை ஆறு முறை அளவிட்டு, இருமுறை உயரத்தையும் வெளியிட்டது.அவர்கள் கணக்கீட்டின்படி, எவரெஸ்ட் சிகரம், 1975ல், 8,848.13 மீட்டராகவும், 2005ல், 8,844.43 மீட்டராகவும் இருந்தது. அந்நாடு இறுதியாக கணக்கிட்ட உயர அளவு, நேபாள நாடு எடுத்திருந்த அளவைவிட, 4 மீட்டர் குறைவாக இருந்தது. இதனால், சிகரத்தின் உயரத்தை மீண்டும் துல்லியமாக அளவீடு செய்ய, சீனாவின் சர்வே குழுவினர், மே, 1ல் முடிவு செய்தனர்.

https://img.dinamalar.com/data/gallery/gallerye_033146315_2547661.jpg

இதையடுத்து, அக்குழுவினர், திபெத் வழியாக புறப்பட்டு சென்று, நேற்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். 'எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவீடு செய்வது, இயற்கையை பற்றிய மனித அறிவை மேம்படுத்துவதோடு, விஞ்ஞான வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்' என, அந்நாட்டு அரசின், 'சின்ஹுவா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE