https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/16/original/dharavi.jpg

தாராவியில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று

by

தாராவியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,190 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 56, 948 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 964 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,918 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் அங்கு மொத்தம் 37,125 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

தாராவியில் இன்று புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,639 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் பலியாகவில்லை. ஆனால், ஏற்கெனவே பலியான ஒருவரின் பெயர் இன்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பலியானோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.