https://s3.amazonaws.com/adaderanatamil/1590588215-carona-2.jpg

மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1370 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 628 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.