இராணு அதிகாரிகள் ஐவருக்கு பதவியுயர்வு!

by

இலங்கை இராணுவத்தின் ஐந்து சிரேஸ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பதவியுயர்வுகள் மே 22ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.

பிரிகேடியர் ஏ.என்.அமரசேகர, பிரிகேடியர் என்.எல்.கே. சமரசிங்க, ரி.டி.வீரக்கோன், ஐ.எச்.எம்.என்.என்.ஹேரத் மற்றும் டி.எஸ்.சாலி ஆகியோரே மேஜர் ஜெனரல்களாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த பதவியுயர்வுகளை வழங்கியுள்ளார்.