மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by

மழை காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலிய, காலி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை வரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரியின் எலபாத்த, அயகம, கிரியெல்ல, கொடக்கவெ, கஹவத்த, கொலொன்ன, எஹலியகொட, குருவிட்ட, கலவானை, ஓப்பநாயக்க, பலாங்கொடை, பெல்மதுல்ல, நிவித்திக்கல ஆகிய இடங்களுக்கும் கேகாலையின் அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கனை, மானெல்ல, தெரணியகல, தெஹியோவிட்ட, புலத்கோஹூபிட்டிய, யட்டியாந்தோட்டை ஆகிய இடங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கண்டியில் கங்கைஹலகோரல்ல, நுவரெலியாவின் அம்பகமுவ, கோரவை பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர களுத்துறையின் நெலுவ,ஹொரனை, இங்கிரிய, மாத்தறையின் கொட்டபொல ஆகிய இடங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.