தொண்டமானின் மறைவிற்கு அமைச்சரவையில் இரங்கல்

by

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு அமைச்சரைவயில் இரங்கல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த இரங்கல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்கள் எழுந்து நின்று தொண்டமானுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொண்டமான் உயிரிழப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் சார்பில் குரல் கொடுத்து வந்த தொண்டமானின் மறைவு பாரிய இழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.