அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றம்

by

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரிசி வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலை கடந்த ஏப்ரல் மாதம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விலை நிர்ணயம் தொடர்பில் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் நாட்டரிசி கிலோ ஒன்று 96 ரூபாவாகவும், சம்பா கிலோ ஒன்று 98 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ ஒன்று 125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.