https://s3.amazonaws.com/adaderanatamil/1590576940-arrested-2.jpg

சுகாதார நடைமுறைகளை மீறிய 357 பேர் கைது

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட முதலாம் நாளான நேற்று (26) சுகாதார நடைமுறைகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் 357 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.