https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/7/original/supreme_court.jpg

கரோனா சிகிச்சைக்கு சென்னை தனியார் மருத்துவமனையின் 4 தளங்களைப் பயன்படுத்த அனுமதி

by

கரோனா நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் 4 தளங்களைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான பில்ரோத் மருத்துவமனையில் நான்கு தளங்கள் விதிமுறைக்குட்பட்டு கட்டப்படவில்லை என்றும் அதனை இடிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. மேலும், எந்த காரணத்துக்காகவும் அந்த தளங்களை உபயோகிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தது. 

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இந்த வழக்கினை இன்று காணொலி வாயிலாக விசாரித்தது. இதில், கரோனா நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனையின் 4 தளங்களைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக ஏற்பாடுகள் செய்ய மருத்துவமனை நிர்வாகத்தை அணுகும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.