கரடி தாக்கியதில் இருவர் காயம்

by

மடு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விளாத்திகுளம் வலையன்கட்டு பகுதியில் கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை காட்டுப்பகுதிக்கு சென்ற இருவர் மீது கரடி தாக்கியுள்ளது.

இந்த நிலையில் காயமடைந்த குறித்த இருவரும் கரடியிடமிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மற்றைய நபர் சிறு காயங்களுக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.