வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் காயம்

by

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடி கொண்டிருந்த இரு சிறுவர்கள் அடையாளம் தெரியாத பொருள் ஒன்றை எடுத்துசென்று சுற்றியல் ஒன்றினால் அதனை தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்தபொருள் திடீரென வெடித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனால் காயமடைந்த குறித்த சிறுவர்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நியாஸ் சனாஸ் (வயது 12), முகமட் ராசித் (வயது 16) ஆகிய சிறுவர்களே காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.