ஏனைய கட்சிகளின் சார்பில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள ஐ.தே.கவினருக்கு அனுப்பப்படவுள்ள கடிதங்கள்

by

ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இந்த கடிதங்களை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மீறி ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளவர்களின் கட்சி உறுப்புரிமைகள் ரத்துச் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் வேட்புமனுக்களில் கைச்சாத்திட்ட எவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் எழுத்துமூல அனுமதியை பெற்றிருக்கவில்லை என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.