https://s3.amazonaws.com/adaderanatamil/1590573482-sri-lanka-abu-dhabi-2.jpg

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் நாளை முதல் மீண்டும் திறப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் நாளை (28) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தூதரகத்தில் கடமையாற்றும் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளான காரணத்தினால் கடந்த 21 ஆம் திகதி முதல் குறித்த தூதரம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அந்நாட்டு அரசாங்கம் விடுத்து சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்பட்ட குறித்த தூதரம் மீண்டும் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.