https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/EZARDfDXkAAjhJR.jpg

மருத்துவர்களுக்கு பூங்கொத்து வழங்கி கௌரவித்த காஷ்மீர் போலீஸார்

by

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு பூங்கொத்து வழங்கி கௌரவித்துள்ளனர் காஷ்மீர் போலீஸார். 

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் வைரஸ் தொற்றுக்கு எதிராக பாதிக்கப்பட்டோரை வைரஸ் தொற்றில் இருந்து மீட்க மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர். மேலும், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு காஷ்மீர் போலீஸார் பூங்கொத்து வழங்கி கௌரவித்துள்ளனர். 

காஷ்மீர் எல்.டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு காஷ்மீர் போலீஸார் பூங்கொத்து கொடுத்து அவர்களின் சேவையைப் பாராட்டினர்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/27/EZARDfnX0AgquZF.jpg
https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/27/EZARDfcXQAcDB32.jpg