https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/corona_virus1.jpg

கடவுளாலும் கரோனாவாலும் எங்கள் வேலையைத் தடுத்து நிறுத்த முடியாது: ராம் கோபால் வர்மா வெளியிட்ட புதுப்பட டிரெய்லர்

by

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்குவதில்லை. இதனால் திரையுலகம் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது.

எனினும் பொது முடக்கம் அமலில் உள்ள இந்த நிலைமையில் ஒரு படத்தைத் தயாரித்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா. கரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள தெலுங்குப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் படத்தின் டிரெய்லர் இது. ஊரடங்குக் காலத்தில் கதை நடக்கிறது. ஊரடங்குக் காலத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது. கடவுளாகட்டும் கரோனாவாகட்டும் எங்களுடைய வேலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபிக்க விரும்பினேன் என்று கூறியுள்ளார். மற்றொரு ட்வீட்டில் அவர் கூறியதாவது: நம்மிடம் உள்ள அச்சம்தான் கரோனா வைரஸ் படத்தின் கதை. அச்சம், நோய், மரணம் ஆகியவற்றுக்கு எதிராக காதலின் வலிமையை இது பரிசோதிக்கிறது என்று படத்தைப் பற்றி கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த் அய்யங்கார் நடிப்பில் இப்படத்தை அகஸ்த்யா மஞ்சு இயக்கியுள்ளார். இசை - டிஎஸ்ஆர்.