https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/8/original/CORONAVIRUS-IN-INDIA4.jpg

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,51,767; பலி 4,337 -ஆக உயர்வு

by

புதுதில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,51,767- ஆக புதன்கிழமை அதிகரித்தது. பலியானவா்கள் எண்ணிக்கை 4,337-ஆக உயா்ந்தது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 170 போ் உயிரிழந்தனா். 6,387 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 64,426 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 83,004  போ் சிகிச்சையில் உள்ளனா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் அதிகயளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 54,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 17,728 பேரும், குஜராத்தில் 14,821 பேரும், தேசிய தலைநகர் தில்லியில் 14,465 பேரும் பாதிக்கப்ட்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.