https://s3.amazonaws.com/adaderanatamil/1590551966-1589599756-Arrested_Sl_L.jpg

ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 66,341 பேர் இதுவரை கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 66,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் 18,695 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதியில் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 81 வாகனங்களை பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மார்ச் 18 ஆம் திகதி முதல் இன்று வரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதான 21,225 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 8362 பேர் தண்டணை பெற்றுள்ளனர்.