கொரோனாவால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் ரூபாய் இழப்பு

by

கொரோனா நிலைமை காரணமாக முடிவடைந்த காலப் பகுதி வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10.09 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.