காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்றுவரை அனுமதிக்கப்பட்டுள்ள 78 கொரோனா தொற்றாளர்கள்

by

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்றுவரை 78 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முத்துலிங்கம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்றுவரை 78 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 67 பேரும் பெண்கள் 11 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் இன்று காலை திருகோணமலையிலிருந்து வரும் 17 பெண்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png

தற்போது அனுமதிக்கபட்டுள்ளவர்களில் 28 பேர் கடற்படையினர் என்பதுடன் 30 பேர் குவைத் நாட்டிலிருந்து வந்தவர்கள். ஏனையோர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 70 கட்டில்களின் எண்ணிக்கை தற்போது 100 ஆக அதிகரிப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 100 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கல்லடி கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 63 கடற்படையினருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் இதில் 10 பேரின் மாதிரிகள் நேற்றையதினம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.