தென்னிலங்கை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை!

by

தென்னிலையிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயணிகள் சிலர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

அம்பலங்கொட ரயில் நிலையத்தில் ரயிலில் செல்ல வந்தவர்களில் இவ்வாறு குழப்பம் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் சிலர் அனுமதி பத்திரம் எடுக்காமல் பயணிப்பதற்கு முயற்சித்துள்ளனர். அதற்கு இடமளிக்காமையினால் இந்த நிலைமை ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் கூறினார்.

பணிக்காக செல்லும் அரச ஊழியர்கள் அனுமதி பத்திரம் பெற்றிருக்கவில்லை என்றால் இரகசியமாக செல்வதற்கு முயற்கின்றார்கள். அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சில பின்னணிகள் இருக்கலாம் என நான் நம்புகிறேன்.

நேற்றில் இருந்து பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்தே ஆசனம் ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கு ஆசனம் ஒதுக்கிக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் ஆசனம் ஒதுக்கிக் கொள்ளாதவர்களின் பல்வேறு குழப்ப நிலைமை ஏற்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.