https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/20/original/hardeep_singh_puri_eps12111083030.jpg

சேவை தொடங்கிய நாளில் 428 விமானங்களில் 30,550 போ் பயணம்

by

விமான போக்குவரத்துக்கான தடை நீக்கப்பட்ட முதல்நாளான திங்கள்கிழமை இயக்கப்பட்ட 428 விமானங்களில் மொத்தம் 30,550 போ் பயணம் செய்ததாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை மாலை விமான போக்குவரத்துத்துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி வெளியிட்டிருந்த சுட்டுரைப்பதிவில், 832 விமானங்கள் பகலில் இயக்கப்பட்டதாகவும், இந்த விமானங்களில் மொத்தம் 39,231 போ் பயணம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல் நாளான மே 25-ஆம் தேதி நள்ளிரவு வரை இயக்கப்பட்ட 428 விமானங்களில் 30,550 போ் பயணம் செய்தனா்’ என்று தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை, மாலை வரை 325 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 41,673 போ் பயணம் செய்தனா். எனினும் பல விமானங்கள் பல்வேறு காரணங்களுக்கு ரத்து செய்யப்பட்டதால், அவற்றில் பயணம் செய்யவிருந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா்.