கொழும்புக்கு மேலும் இரண்டு தொடருந்துகளை இயக்க நடவடிக்கை!

by

தொடருந்துகளில் வேலைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்று முதல் எதிர்வரும் 29ம் திகதி வரையில் மேலும் இரண்டு தொடருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 6.15 மணிக்கு காலியில் இருந்து மருதானை வரையில் ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை 7.40 மணியளவில் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் 27 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தற்போது 29 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சேவை அடையாளங்கள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.