https://d13m78zjix4z2t.cloudfront.net/sia_0.png

பெண் போலீசை திருமணம் செய்து கொண்டு பணம், நகையுடன் தலைமறைவான நபருக்கு போலீசார் வலைவீச்சு!

by

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பெண் போலீசை திருமணம் செய்து 7லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகையை மோசடி செய்து தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் களக்காட்டில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர் தங்கராணி இவரை ராதாபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்த சிவ பிரேம்குமார்  திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார் அந்த சமயத்தில் சிவ பிரேம்குமார் தங்க ராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இதனிடையே தங்கராணி, சிவபிரேம்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படும் 7 லட்ச ரூபாய் மற்றும் நகைகளை திருப்பி கேட்டுள்ளார் பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவந்த சிவபிரேம்குமார் பெண் போலீஸ் தங்க ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது இது குறித்து தங்கராணி ராதாபுரம் போலீசில் புகார் செய்துள்ளார் புகாரின்பேரில் ராதாபுரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெகதா, பெண்கள் வன்கொடுமை ,மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை தேடி வருகிறார்.