https://d13m78zjix4z2t.cloudfront.net/ama_3.png

ஆதிச்சநல்லூர், ஈரோடு கொடுமணல் பகுதிகளில் விரைவில் அகாழய்வு: அமைச்சர் பாண்டியராஜன்

by

தமிழனின் பெருமையை பறைசாற்றும் ஆதிச்சநல்லூர், ஈரோடு கொடுமணல் பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் அருகே உள்ளது சிவகளை. அங்கு கடந்த திங்கட்கிழமை  முதற்கட்ட ஆகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மேலும் சில இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை அடுத்த ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிட்டனமல்லி பகுதியில் 350 குடும்பங்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவகளையில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஆதிச்சநல்லூரில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/siva.png