https://d13m78zjix4z2t.cloudfront.net/telungu_0.png

வேறு பெண்ணுடன் இருக்கும் போது கையும் களவுமாக மனைவியிடம் பிடிப்பட்ட கணவன்!

by

தெலங்கானாவில் மனைவியை பிரிந்து வேறோரு பெண்ணுடன் வசித்து வந்தவரை மனைவி அடித்து, துவைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் போத்தகனரில் வசித்து வருபவர் துளசி. அரசு ஊழியாராக பணியாற்றி வரும் துளசி , சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக துளசியை விட்டு பிரிந்து சென்ற கணவர் சீனிவாஸ் வீட்டிற்கு வரமால் இருந்துள்ளார். கணவர் எங்கு சென்றார் என விசாரித்ததில் வேறொரு பெண்ணுடன் தொடர்ப்பு இருப்பது துளசிக்கு தெரியவந்துள்ளது. 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/kk_1.png

இதையடுத்து,  பீட்பஜாரில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த பெண்ணுடன் சீனிவாஸன் தங்கியிருப்பதை உறுதி செய்த துளசி நேரில் சென்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  உறவினர்களுடன் வீட்டை முற்றுகையிட்ட துளசி, உள்ளே புகுந்து அந்த பெண்ணையும், கணவனையும் சரமாரியாக தாக்கினார். நடுரோட்டிற்கு இழுத்து வந்து  இரண்டு பேரையும் வெளுத்து வாங்கிய பின்னர் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு இருவரையும் இழுத்துச் சென்றுள்ளார். உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கணவர் மீது புகார் அளித்துள்ளார். கள்ளக் காதலிக்கும், கணவனுக்கும் மனைவி நடத்திய கச்சசேரி வீடியோ வேகமாக பரவி வருகிறது.