https://d13m78zjix4z2t.cloudfront.net/awaw_0.png

பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்!

by

மதுரை அருகே கூடல்நகரில் எஜமானரின் குடும்பத்தை பாம்பிடம் இருந்து காப்பாற்ற போராடிய வளர்ப்பு நாய் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் கூடல்நகர் பகுதியில் ஜோப்ரியல் என்பவர் வசித்து வருகிறார், இவர் டாபர்மேன் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்,இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு வராண்டாவில் திடீரென 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று நுழைந்துள்ளது, சாரைப்பாம்பு வீட்டில் நுழைவதை பார்த்த அந்த நாய் தனது எஜமானரை காப்பாற்ற பாம்புடன் கடும் சண்டை இட்டு,கடைசியில் பாம்பை கடித்து கொன்றுள்ளது, தொடர்ந்து நாய் குரைத்து கொண்டே இருப்பதை அறிந்த வீட்டின் உரிமையாளர் ஜேப்ரியல்வெளியே வந்து பார்த்த போது பாம்பு ஒன்று தனது செல்லப்பிராணியால் கடிக்கப்பட்டு இறந்து கிடந்த பாம்பை கண்ட அதிர்ச்சியடைந்தார், மேலும் பாம்பு கடித்ததில் நாயின் உடலில் இரண்டு மூன்று இடங்களில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.