https://d13m78zjix4z2t.cloudfront.net/tas_2.png

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

by

மதுபானங்களை கொள்முதல் செய்யும்போது, அவற்றின் தரம் சரிபார்க்கப்படுகிறதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர், சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதில், மதுபானங்கள் தரமாக இருக்கிறதா என சரிபார்த்து கொள்முதல் செய்யப்படுகிறதா? எனவும், அதற்கு ஆதாரம் உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுவரை, எப்படி கொள்முதல் செய்யப்பட்டது என்று விளக்கம் அளிக்கவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? 
என கேள்வி எழுப்பி உள்ளனர். 

மேலும், மதுபானங்கள் விற்கும்போது, ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா எனவும், ஒவ்வொரு மதுபான கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பினர். அதிக விலைக்கு விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி நீதிபதிகள், அதுகுறித்து ஜூன் 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.