https://d13m78zjix4z2t.cloudfront.net/child_13.png

சென்னையில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா!

by

மாங்காட்டில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாங்காடு, லீலாவதி நகரைச் சேர்ந்த 55 வயது நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இவரது வீட்டில் உள்ள மனைவி மகன், மகள், பேத்தி, கர்ப்பிணி பெண் என அனைவருக்கும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்தபோது இவருடன் சேர்த்து ஆறு பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. கொரோனா பாதிப்போடு கர்ப்பிணி பெண்ணும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றார்.

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த வாரம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்காவது நாளில் அந்த குழந்தைக்கும் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இரத்த மாதிரி சோதனையின் முடிவு இன்று வந்தநிலையில் குழந்தைக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழுந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையும் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த குடும்பத்தில் மட்டும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.