https://d13m78zjix4z2t.cloudfront.net/t_1.png

தாயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய இரக்கமற்ற மகன்!

by

தெலங்கானா மாநிலத்தில் தாயின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், நரசிங்கம்பட்ல கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்குசாமி கூலி வேலை செய்து வருகிறார். இவரது தாய் சாந்தி அம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில நாட்களாக படுத்த படுக்கையிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருந்த லிங்குசாமி, மது அருந்தி வந்து தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வேலை இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கும் நிலை இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சாந்தி அம்மாள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய லிங்குசாமி, உயிருடன் தீ வைத்து கொளுத்தினார். சாந்தி அம்மாளின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது அவர், எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடிய மகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.