சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது

by

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மருமகள் முறையிலான சிறுமியை அதே பிரதேசத்தைச் சோந்த 1 4 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளதாகவும், கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோரனின் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.