https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/02FEB2014PTI09_17-03-2014_16_0_1.jpg
கோப்புப்படம்

தாராவியில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று

by

மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: 

மும்பையில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 31,789 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,026 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

தாராவியில் இன்று 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்துள்ளது.