ரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது

by

தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள ரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய காங்கிரஸின் கல்முனை தொகுதி வேட்பாளரும், பிரபல உயிரியல் விரிவுரையாளருமான றிசாத் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

மூவர் அடங்கிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் கூட்டுப்பொறுப்பு மீறப்படுவது என்பது மனம் வருந்ததக்க ஒரு விடயமாக இருக்கின்றது.

கூட்டுப்பொறுப்புள்ள நபர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருப்பதை விட கூட்டுப்பொறுப்போடு செயற்பட வேண்டிய நபர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருப்பது எதிர்கால தேர்தலில் சிறப்பாக இருக்கும் என்பது எனது உளப்பூர்வமான கருத்து.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சிபார்சின் பேரில் தேர்தல்கள் ஆணைக்குழு வந்தவர் என அறியக்கிடைத்த விடயம் .

கற்றறிந்த பேராசிரியர் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எந்த விடயமானாலும் நேர் நிலையில் நின்று செயற்பட வேண்டும் அதனை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது செயற்பாடுகளை நான் வரவேற்கிறேன்என்றும் தெரிவித்துள்ளார்.