http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__803859889507294.jpg

கேரளாவில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 897-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை 532 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் தற்போது 368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.